மனிதர்கள் பொய் சொல்வதை கண்டறிய புதிய மென் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒருவரின் முக அசைவுகளை வைத்து அவர்கள் உண்மை சொல்கிறார்களா பொய் சொல்கிறார்களா என்பதை கணிக்க புதிய மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிரத்யேகமாக மனிதர்களின் வாய் கன்னம், கண்ணைச் சுற்றிய பகுதிகளின் அசைவுகளும் துல்லியமாக பதிவு செய்யப்படும். பின்னர் ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப ஒப்பிட்டு ஒருவரின் உண்மை மற்றும் பொய் தன்மை கண்டறியப்படுகிறது.